<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>வெண்ணிற இரவுகள்</title>
	<atom:link href="http://tamilnesam.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://tamilnesam.wordpress.com</link>
	<description>Just another WordPress.com weblog</description>
	<lastBuildDate>Wed, 09 Apr 2008 23:12:52 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='tamilnesam.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>வெண்ணிற இரவுகள்</title>
		<link>http://tamilnesam.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://tamilnesam.wordpress.com/osd.xml" title="வெண்ணிற இரவுகள்" />
	<atom:link rel='hub' href='http://tamilnesam.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>சொல்லின் சொல்&#8230;.</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2008/04/09/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2008/04/09/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 09 Apr 2008 23:12:52 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=25</guid>
		<description><![CDATA[நம் உரையாடலில் ஒரு கண உமிழலில் பிறப்பெடுக்கப் போகும் எனது அடுத்த சொல் விசேடமானது&#8230;. நான் உதிர்க்கும் இறுதி சொல்லாக அது இருக்கலாம்&#8230; அல்லது நீங்கள் கேட்கும் கடைசிச் சொல்லாக கூட இது அமையலாம்&#8230;. ஏற்கனவே நான் காற்றில் விதைத்துப் போன சொற்களின் தொடர்வாய் இது நிகழலாம்&#8230; ஒரு கண உமிழலில் காலங் காலமாய் கட்டி வைக்கப் பட்டிருந்த கோட்டைக் கொத்தளங்களை சரிக்கும் உளியாக கூட இது இருக்க்கலாம்.. ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக அது வெடிக்கலாம்&#8230; அல்லது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=25&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நம் உரையாடலில்<br />
ஒரு கண உமிழலில்<br />
பிறப்பெடுக்கப் போகும்<br />
எனது அடுத்த சொல்<br />
விசேடமானது&#8230;.</p>
<p>நான் உதிர்க்கும் இறுதி<br />
சொல்லாக அது இருக்கலாம்&#8230;<br />
அல்லது நீங்கள் கேட்கும்<br />
கடைசிச் சொல்லாக கூட<br />
இது அமையலாம்&#8230;.</p>
<p>ஏற்கனவே நான்<br />
காற்றில் விதைத்துப் போன<br />
சொற்களின் தொடர்வாய்<br />
இது நிகழலாம்&#8230;</p>
<p>ஒரு கண உமிழலில்<br />
காலங் காலமாய் கட்டி<br />
வைக்கப் பட்டிருந்த<br />
கோட்டைக் கொத்தளங்களை<br />
சரிக்கும் உளியாக கூட இது<br />
இருக்க்கலாம்..</p>
<p>ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக<br />
அது வெடிக்கலாம்&#8230;</p>
<p>அல்லது</p>
<p>மெளனமாய் இறந்தவனின்<br />
கல்லறையில் ஒரு<br />
உதிரிப் பூவாகக் கூட<br />
அது கிடக்கலாம்&#8230;.</p>
<p>ஆனால் அந்த சொல்லின்<br />
கரைசலின் மீதத்தில்<br />
நான் இருப்பேன் என்பதை<br />
இப்போதைக்கு<br />
உறுதியாய் சொல்ல முடியும்.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/25/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/25/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/25/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/25/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/25/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=25&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2008/04/09/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பிரிவிற்கான மொழி&#8230;</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2008/03/30/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2008/03/30/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 30 Mar 2008 23:11:41 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=24</guid>
		<description><![CDATA[மிக நெருங்கிய தருணத்தில் ஒரு வியர்வைத்துளியின் இடைவெளியில் மெல்ல விலகி விட்டோம் நாம்&#8230;. எதிரெதிர் திசைகளில் நகரும் ரயில் பெட்டிகளில் எது நகருகிறது&#8230;.? நிகழ்தகவுகளாய் வர்ணம் மாறிய மனதின் மெளனத்தை பேச முடியுமா உன்னால்&#8230;? இயல்பு மீறிய ஒரு சலனத்திற்காக இருவருமே அமைதியாய் காத்திருக்கிறோம்&#8230;. பிரிவுகளின் உலர்ந்த காரணங்களுக்கான பிரத்யோக மொழிகளை சொல்வதற்கு உதடுகள் தங்களை ஈரப் படுத்திக் கொள்கின்றன&#8230; ஏதாவது ஒரு உடைபடாத நொடியில் உடையலாம் நம் பிரிவிற்கான உறவு&#8230;. நீண்ட மெளனங்களின் கருத்த வராண்டாக்களில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=24&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மிக நெருங்கிய தருணத்தில்<br />
ஒரு வியர்வைத்துளியின்<br />
இடைவெளியில் மெல்ல<br />
விலகி விட்டோம் நாம்&#8230;.</p>
<p>எதிரெதிர் திசைகளில்<br />
நகரும் ரயில் பெட்டிகளில்<br />
எது நகருகிறது&#8230;.?</p>
<p>நிகழ்தகவுகளாய் வர்ணம்<br />
மாறிய மனதின் மெளனத்தை<br />
பேச முடியுமா உன்னால்&#8230;?</p>
<p>இயல்பு மீறிய ஒரு<br />
சலனத்திற்காக<br />
இருவருமே அமைதியாய்<br />
காத்திருக்கிறோம்&#8230;.</p>
<p>பிரிவுகளின் உலர்ந்த<br />
காரணங்களுக்கான<br />
பிரத்யோக மொழிகளை<br />
சொல்வதற்கு உதடுகள்<br />
தங்களை ஈரப் படுத்திக்<br />
கொள்கின்றன&#8230;</p>
<p>ஏதாவது ஒரு உடைபடாத<br />
நொடியில் உடையலாம்<br />
நம் பிரிவிற்கான<br />
உறவு&#8230;.</p>
<p>நீண்ட மெளனங்களின்<br />
கருத்த வராண்டாக்களில்<br />
தளர்ந்து நடக்கிறது&#8230;.<br />
நம்மை மீறி கொப்புளிக்க<br />
துடித்த நம் முதல்<br />
துளிர்த்தலுக்கான நினைவு&#8230;.</p>
<p>மிடறு விழுங்கினாலும்<br />
மீறி வர எத்தனிக்கும்<br />
நம் அரிதாரத்தை காட்டும்<br />
அளவுக்கு மீறிய ஓப்பனை&#8230;</p>
<p>நொடிகள் கடந்தாலும்<br />
நம்மை கடக்காமல்<br />
நிற்கிறது இந்த<br />
இமைக்காத பொழுது&#8230;.</p>
<p>சில பெருமூச்செறிதல்களுக்கு<br />
பிறகு&#8230;</p>
<p>சின்னப் புன்னகையோடும்<br />
மென்மை கைக் குலுக்கலோடும்<br />
துவங்கிறது&#8230;</p>
<p>நம் பிரிவிற்கான மொழி.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/24/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/24/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/24/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/24/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/24/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/24/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/24/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/24/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/24/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/24/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/24/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/24/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/24/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/24/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/24/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/24/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=24&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2008/03/30/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>என் கவிதைகள்&#8230;</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2008/03/25/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2008/03/25/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 25 Mar 2008 23:10:48 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=23</guid>
		<description><![CDATA[* இன்னும் ஈரம் குலையாத வண்ணத் தூரிகையில் இருந்து சொட்டிக்கொண்டே இருக்கின்றன&#8230; வரையப் படாத என் ஓவியங்கள்&#8230; * அறியப் படாத பின்னிரவுகஆளில் வெளிர் நீலமாய் கசியும் என் கனவுகளை மிரட்டி துரத்துகின்றன தெரு நாய்களின் ஓலங்கள்&#8230; * விடியலின் பிளிறலில் மிரண்டு ஓடும் விட்டில்கள்&#8230;.. * நீ விசி எறிந்த எனக்கான ப்ரத்யோக பார்வையை உலர்ந்த சருகுகளிடயே சப்தமிடாமல் நான் தேடிய அந்த மஞ்சள் மாலைப் பொழுதில்&#8230;&#8230;.. என்னைக் கடந்து எத்தனை பட்டாம்பூச்சிகள் பறந்து சென்றன [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=23&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>*</p>
<p>இன்னும் ஈரம் குலையாத<br />
வண்ணத் தூரிகையில்<br />
இருந்து<br />
சொட்டிக்கொண்டே இருக்கின்றன&#8230;<br />
வரையப் படாத என் ஓவியங்கள்&#8230;</p>
<p>*</p>
<p>அறியப் படாத பின்னிரவுகஆளில்<br />
வெளிர் நீலமாய் கசியும்<br />
என் கனவுகளை மிரட்டி<br />
துரத்துகின்றன தெரு<br />
நாய்களின் ஓலங்கள்&#8230;</p>
<p>*</p>
<p>விடியலின் பிளிறலில்<br />
மிரண்டு ஓடும்<br />
விட்டில்கள்&#8230;..</p>
<p>*</p>
<p>நீ விசி எறிந்த<br />
எனக்கான<br />
ப்ரத்யோக பார்வையை<br />
உலர்ந்த சருகுகளிடயே<br />
சப்தமிடாமல் நான் தேடிய<br />
அந்த மஞ்சள் மாலைப்<br />
பொழுதில்&#8230;&#8230;..<br />
என்னைக் கடந்து எத்தனை<br />
பட்டாம்பூச்சிகள் பறந்து<br />
சென்றன என்பதற்கான<br />
கணக்கில் நினைவில்<br />
நின்றவை தவிர<br />
மறந்துப் போன<br />
சில உதிரிகளைக் குறித்து<br />
எனது பெரும் கவலை<br />
இருந்தது என்பது பற்றி<br />
நீ ஏதும் அறிவாயா..?</p>
<p>*</p>
<p>ஆங்காங்கே இடப்பட்ட<br />
புள்ளிகளில் யூகிக்க<br />
முடியாமல் திணறுகிறேன்<br />
ஒரு அழகிய கோலாத்தை&#8230;.</p>
<p>*</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/23/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/23/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/23/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/23/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/23/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=23&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2008/03/25/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சிலைகள் குறித்தான பார்வையும்..பதிவும்&#8230;</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2008/03/23/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2008/03/23/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sun, 23 Mar 2008 23:10:05 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=22</guid>
		<description><![CDATA[சிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை&#8230; சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்&#8230;.கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது&#8230;சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது&#8230; எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல&#8230; சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்&#8230;சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=22&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை&#8230;</p>
<p>சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்&#8230;.கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது&#8230;சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது&#8230;</p>
<p>எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல&#8230;</p>
<p>சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்&#8230;சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆளுமை குறித்தான செய்தியை நிரந்தரமாக விட்டுச் செல்லும் எண்ணத்தின் பாற் சார்ந்தது&#8230;</p>
<p>தந்தை பெரியார்,, அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் நிறுவப் படுதலை ஆதரிப்பதும் இவ்வகையை சார்ந்தது&#8230;பறவைகள் சிலைகள் மீது மட்டுமா அசிங்கம் செய்கின்றன&#8230;?</p>
<p>பறவைகளுக்கு சிலை,மனிதன் என்றெல்லாம் பேதமில்லை..நாம் துடைத்துக் கொள்கிறோம்..சிலைகளை மழை குளிப்பாட்டுகிறது. அவ்வளவே&#8230;</p>
<p>ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் மீதும் தான் பறவைகள் அசிங்கம் செய்கின்றன,,,,காக்கைகளுக்கு தெரியுமா&#8230;மனிதன் கண்டுபிடித்த கடவுளின் அரசியல்&#8230;?</p>
<p>ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலை மக்களுக்கு போராடிய, மொழி ,இன உணர்விற்கு வித்திட்ட ,மக்களை சமூக தாழ்விநிலையில் இருந்து உயர்த்த துடித்திட்ட தலைவர்களுக்கு சிலை வைப்பது&#8230;.கோவில் கட்டுவதை விட புனிதமான காரியம் ஆகும்.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/22/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/22/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/22/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/22/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/22/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/22/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/22/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/22/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/22/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/22/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/22/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/22/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/22/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/22/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/22/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/22/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=22&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2008/03/23/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு&#8230;</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2008/03/07/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2008/03/07/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#comments</comments>
		<pubDate>Fri, 07 Mar 2008 23:09:11 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=21</guid>
		<description><![CDATA[என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு&#8230;. வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது.. மிகவும் மகிழ்ச்சி&#8230; உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது&#8230;.. என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன&#8230;இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை&#8230; [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=21&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு&#8230;.</p>
<p>வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..<br />
மிகவும் மகிழ்ச்சி&#8230;</p>
<p>உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது&#8230;..</p>
<p>என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன&#8230;இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை&#8230;</p>
<p>உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்&#8230;.துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்&#8230;ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது&#8230;</p>
<p>நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்&#8230;</p>
<p>ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.</p>
<p>இன்னும் நிறைய இருக்கிறது&#8230;</p>
<p>ஒரு மழை பொழியும் நாளில்&#8230;.<br />
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்&#8230;&#8230;</p>
<p>முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்&#8230;</p>
<p>மிகுந்த மகிழ்ச்சியோடு&#8230;.<br />
உங்களின் எளிய வாசகன்.<br />
மணி.செந்தில்</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/21/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/21/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/21/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/21/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/21/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=21&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2008/03/07/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குஷ்பு பிரச்சினைக்காக &#8211; உதமஅ விற்கு</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2008/01/08/%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2008/01/08/%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89/#comments</comments>
		<pubDate>Tue, 08 Jan 2008 23:08:03 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[எதிர்வினை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=20</guid>
		<description><![CDATA[தோழர்களே&#8230;. குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை&#8230; மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது&#8230;. தோழர்.திருமாவளவன்&#8230;.திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல&#8230;சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல&#8230;. சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா&#8230;. திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=20&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>தோழர்களே&#8230;.</p>
<p>குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை&#8230;</p>
<p>மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது&#8230;.</p>
<p>தோழர்.திருமாவளவன்&#8230;.திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல&#8230;சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல&#8230;.</p>
<p>சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா&#8230;.</p>
<p>திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் அப்பழுக்கற்றது&#8230;&#8230;சமூக சிந்தனை உடைய போர்க் குணம் மிக்க தோழர் திருமா மதிப்பிற்குரியவர் என்பதில் தமிழனாய் உணருபவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை&#8230;.</p>
<p>நம் பண்பாடு தெரியாத, நம் இனத்து பெண்களுக்கு கற்பு இல்லை என்று ஆபாச அவதூறு பேசிய குஷ்பு இது வரை சமூகத்திற்காக எந்த களத்தில் நின்றுள்ளார்..?</p>
<p>தோழர் திருமா நின்ற களங்கள் நாடறிந்தது..புலம் பெயர்ந்த நமது சகோதரர்கள் மத்தியில் அவருக்குள்ள மதிப்பு பெருமைக்குரியது&#8230;</p>
<p>நடந்த அந்தக் கூட்டத்தில் யாரும் குஷ்புவிடம் போய் மரியாதை யாசகம் கோர வில்லை&#8230;..அந்த பெண்மணியே வலிய சென்று திருமாவிற்கு வணக்கம் வைக்கவில்லை என்றால் என் மீது வழக்கு போடுவார்கள் என்று நக்கல் பேசிய பிறகுதான் பிரச்சனை துவங்கியது&#8230;..</p>
<p>குஷ்புவிற்கு ஒரு தமிழனை பார்த்தால் , ஒரு தமிழச்சியை பார்த்தால் இழிவுப் படுத்த வேண்டும் என்ற குணம் இயல்பாகவே உள்ளது&#8230;</p>
<p>ஏற்கனவே நம் மண்ணின் கலைஞன் தங்கர் பச்சான் மீது கருத்து தாக்குதல் நடத்திய<br />
குஷ்பு , ஜெயா தொலைக்காட்சியில் தங்கரா&#8230;who is he&#8230;? என்று கேட்ட குஷ்பு&#8230;<br />
பெரியார் பட விழாவில் தங்கர்பச்சான் ஒளிப் பதிவில் நடிக்காதது எனக்கு குறையாக உள்ளது என்று வருந்தினார்&#8230;</p>
<p>தோழர்.திருமா நம் மண்ணின் அடையாளம் &#8230;..முதலில் ஒரு அவர் ஒரு தமிழன்&#8230;</p>
<p>நம் வீடுகளில் வந்தோரை வரவேற்று உபசரித்து பாராட்டும் பண்பாடு நம்முடையது..</p>
<p>தோழர்.திருமாவளவன் வந்தவுடன், கால் மேல் கால் போட்டுக் கொண்டு தலையை திருப்பிக் கொண்ட குஷ்பு பின் வலியச் சென்று வம்பிற்கிழுத்து நம் உணர்வை சீண்டி பார்க்கிறார்&#8230;</p>
<p>அதே கூட்டத்தில் கலந்து கொண்ட நம் தமிழனப் பாவலர் அண்ணன் அறிவுமதி தன்னுடைய கண்டனத்தை உடனே பதிவு செய்துள்ளார்&#8230;.</p>
<p>அந்த குஷ்பு விற்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ள இயல்பு இல்லை என்பதால் அவர் அவசர , அவசரமாக கூட்டத்தை விட்டு வெளியேறி உள்ளார்..</p>
<p>தாழ்த்தப் பட்ட மக்களின் புரட்சிக் குரலான தோழர் .திருமாவளவன் மதிப்பு மிகுந்தவர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி தன்னுடைய வம்பிற்கிழுக்கும் ஆயுதத்தால் தாக்க முனைந்துள்ளார்&#8230;</p>
<p>குஷ்பு மேற்கொண்டுள்ள தாக்குதல் ஒட்டுமொத்த தமிழர் நிலைகளுக்கு எதிரானது&#8230;..</p>
<p>தோழர் திருமா விற்கு குஷ்புவின் மதிப்பு தேவை இல்லை&#8230;.</p>
<p>ஆனால் குஷ்பு கண்டனத்திற்கு உரியவர் என்பது அவரது கவனத்தில் கொள்வதற்காவே இந்த பதிவுகள் பதிக்கப் படுகின்றன&#8230;&#8230;</p>
<p>இது போன்ற செயல்களுக்கு குறைந்த பட்ச நம் எதிர்ப்பை காட்ட வில்லை என்றால்<br />
நாம் தமிழர்களாய் உணர்வதில் அர்த்தம் இல்லை&#8230;.</p>
<p>குஷ்புவை கூட்டத்திற்கு அழைத்தது தவறில்லை&#8230;.குஷ்பு அப்படி நடப்பார் என்று யாரும் எதிர்ப்பார்க்க வில்லை&#8230;.</p>
<p>குஷ்பு நடந்த கொண்ட விதம்&#8230;&#8230;நமக்கு சவால் விடுப்பதை போல் அமைந்துள்ளது&#8230;.</p>
<p>தமிழர்கள் தங்களின் உணர்வை வெளிப் படுத்தும் ஒரு களமாகவே உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தை பயன் படுத்தி வருவதில் என்ன தவறு&#8230;&#8230;.</p>
<p>உலக தமிழ் மக்கள் அரங்கம் -இணையம் பயன் படுத்தும் தமிழர்களால் வாசிக்கப் பட்டு வருகிறது,&#8230;.</p>
<p>எனவே உண்மையை எடுத்து கூற &#8230;&#8230;எங்கள் கருத்துக்களை கூற நம் மக்கள் அரங்கம் ஒரு களமாக நாங்கள் பயன் படுத்துகிறோம்&#8230;..<br />
தோழர்களே&#8230;</p>
<p>குஷ்பு கலந்து கொண்ட விழாவை தோழர் திருமா புறக்கணித்து இருக்கலாமே என்ற கருத்தை தோழர் யுவன் பிரபாகரன் முன் வைத்துள்ளார்&#8230;</p>
<p>..அது ஒரு இலக்கிய விழா&#8230;..இலக்கிய அறிமுகம் , உலக புரட்சி,தலித்தியம் ,பெண்ணீயம் போன்ற தளங்களில் நல்ல அறிமுகம் உடைய தோழர்.திருமாவளவன் கலந்து கொள்வது தவறா..?</p>
<p>மேலும் குஷ்பு இப்படி அநாகரிகமாக, தமிழர்களை சீண்டி பார்க்கும் வகையில் செயல்படுவார் என்பதை யார் அறிந்திருக்க முடியும்..?</p>
<p>எதிரி வந்தால் கூட அன்புடன் உபசரித்து ,மரியாதை செய்வது தமிழர் பண்பாடு இல்லையா..?</p>
<p>குஷ்புவிற்கென்ன அவ்வளவு ஆணவம்&#8230;?</p>
<p>தமிழர்களிடையே நிலவும் அரசியல்,கோஷ்டி பூசல், சாதி ஆகியவைகளை தனக்கு சாதகமாக குஷ்பு பயன்படுத்துகிறார்&#8230;.</p>
<p>இது அறிவுமதிக்கோ , திருமாவளவனுக்கோ, இழிவு இல்லை&#8230;</p>
<p>கலைஞர்,இராமதாஸ்,திருமாவளவன், கிருஷ்ணசாமி, போன்ற தமிழர் தலைவர்கள்<br />
யார் அவமானப் பட்டாலும் அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது&#8230;</p>
<p>இதில் தோழர்கள் கிண்டல் செய்வதற்கும் ,கேலி செய்வதற்கும் என்ன இருக்கிறது&#8230;?</p>
<p>பாவலர் அறிவுமதி எழுப்பிய கலகம் இயல்பிலேயே தமிழனாய் உணருபவனுக்கு உரியது&#8230;..</p>
<p>அந்த இடத்தில் நான் இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்&#8230;</p>
<p>இதில் நமக்குள் இருக்கும் அரசியலை ,கோஷ்டிப் பூசலை காட்ட இதுவா நேரம்&#8230;?</p>
<p>தோழர் சம்போ ஏன் கோபப் படுகிறார்&#8230;அவர் என்ன சொல்ல வருகிறார்,,?</p>
<p>குஷ்பு செய்தது சரி என்று சொல்ல என்ன காரணங்கள் வைத்திருக்கிறார் சம்போ..?</p>
<p>பதில் சொல்ல காத்தி இருக்கிறேன்&#8230;</p>
<p>இதில் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வந்தது என்று தோழர் .யுவன் தான் சொல்ல வேண்டும்&#8230;.</p>
<p>கருத்து சுதந்திரம் வேறு&#8230;தமிழன் மேல் திணிக்கப் படும் இழிவு என்பது வேறு&#8230;.</p>
<p>திருமாவை விட குஷ்பு தோழர்களுக்கு எவ்விதத்தில் உகந்ததாக இருக்கிறார்&#8230;?</p>
<p>என்பதை தெரிவித்தால் நலம்&#8230;</p>
<p>இந்த பிரச்சனையில் நமது ஒற்றுமையை காட்டுவதே சாலச் சிறந்தது&#8230;..</p>
<p>தோழர்.திருமாவளவன் ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர் என்பதால் குஷ்புவிற்கு வரம்பு மீறிய கருத்து சுதந்திரம் வந்து விடுமா என்ன..?</p>
<p>தலித்தியம், பெண்ணீயம் ,பெரியாரியம,தமிழ் உணர்வு், போன்றவற்றை முன் எடுத்து செல்கிற தோழர்.திருமாவளவன் மீது குஷ்பு வீசும் அலட்சியமும், துர்நோக்கும் உடைய<br />
இழிவு ,,,,<br />
&#8216;</p>
<p>கலைஞர்,மருத்துவர் ராமதாஸ்,மருத்துவர் கிருஷ்ணசாமி,பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, இடது சாரி தோழர்கள்,சுபவீ, தியாகு என்று யார் மீது வீசப் பட்டாலும் அது எதிர்ப்பிற்குரிய விஷயம் இல்லையா..?</p>
<p>தோழர்களே&#8230;.</p>
<p>நமக்குள் எழுந்த இந்த விவாதம் ஆரோக்கிய கருத்துக்களை பேசிக் கொள்ளவே துவங்கப் பட்டது&#8230;..</p>
<p>எந்த மனிதருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் என்று ஒன்று உண்டு&#8230;..</p>
<p>தனிப்பட்ட கருத்துக்கள்,கருத்து சுதந்திரம் போன்ற உரிமைகள் மற்றவர்களை காயப் படுத்தாமல் இருப்பதே சிறந்தது&#8230;</p>
<p>குஷ்பு தொடர்ந்து தனது செய்கைகளால் ஊடகப் பரபரப்பிற்கு ஆளாகி வருவது சிந்தனைக்குரிய கேள்வி&#8230;</p>
<p>தமிழனாய், தமிழ் உணர்வோடு வாழ்வது என்பதே இப்போது கிண்டலுக்குரிய, கேலிக்குரிய விஷயமாய் மாறிப்போனது என்பது தான் என் கவலை&#8230;.</p>
<p>கலைப் போராளி சீமான் சொன்னது போல உலகிலேயே அதிகம் இழிவுகளையும் அவமானங்களையும் சந்தித்தது -நம் தமிழினமாகத்தான் இருக்க முடியும்&#8230;</p>
<p>தான் கேவலப் படுத்தப் படுகிறோம் என்பது கூட இங்கே நகைச்சுவைக்கு உரிய விஷயமாகப் போனது நமது குறை&#8230;.</p>
<p>தமிழன், சாதி துறந்து, அரசியல் மறந்து, கோஷ்டி தொலைந்து தமிழனாய் வாழும் காலம் எப்போது வரும் என்ற சிந்தனையோடு&#8230;. இந்த இரவில் உங்களிடத்தில் இருந்து விடை பெறுகிறேன்&#8230;&#8230;நன்றி&#8230;..வணக்கம்</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/20/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/20/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/20/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/20/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/20/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=20&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2008/01/08/%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காலச்சுவட்டின் நவீன கதாகாலட்சேபம்…</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2007/12/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2007/12/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 17 Dec 2007 23:04:53 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[எதிர்வினை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=19</guid>
		<description><![CDATA[அ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்… காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை… தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=19&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்…<br />
காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை…<br />
தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் அவர்களுக்கு தனியே ஒரு இடம் உண்டு…பெளத்த,சமண ஆய்வுகள் மூலம் இந்துத்துவாவின் தோலுறித்த அ.மார்க்ஸ்க்கு காலச்சுவடு கண்ணன் மூலம் எதிர்ப்பு வந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்…..<br />
ஞாநியும்,கண்ணனும் அமைந்திருக்கும் சாதிக் கூட்டணி இந்த முறை அ.மார்க்ஸை தாக்க அமைந்துள்ளது…..பார்ப்பனச் சார்பு தன்மையில் காலச்சுவட்டின் முகமுடி கிழிந்து தொங்குவது குறித்து கண்ணனுக்கு திடீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது…..ஏற்கனவே சங்கராச்சாரி கைது சம்பவத்தின் போது எழுத்தாளர்கள் இதில் எதிர்வினை புரிய வேண்டும் என மறைந்த சுந்தர ராமசாமி கருத்து தெரிவித்தப் போதே நான் தீராநதியில் எழுதிய எதிர்வினையில் இது போன்ற சாதாரண கைது நிகழ்வை சுந்தர ராமசாமி தனக்கே உரிய குறுக்கு வழியில் பரபரப்பாக்க முயல்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.<br />
காலச்சுவடு இந்த முறை அ.மார்க்ஸை தாக்கியுள்ளதை அ.மார்க்ஸ் என்ற தனிநபர் மீது நடந்த தாக்குதலாக நாம் கருத இயலாது. ஞாநியின் விஷம் தோய்ந்த கட்டுரை குறித்து எதிர்வினைகள் செய்த உலக தமிழ் மக்கள் அரங்கம் உறுப்பினர்கள் மற்றும் இணைய பக்கங்களில் எழுதி தன் எதிர்ப்பை பதிவு செய்த தோழர்கள், தமிழ் நாடு முழுதும் கண்டன கூட்டங்கள் நடத்திய தமிழ் படைப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி சேர்த்து மொழிப் பற்றாளர்கள் அனைவரின் மீதும் காலச்சுவடு நடத்திய தாக்குதலாக இதை நாம் நினைக்கிறோம்…</p>
<p>ஞாநி மீது ரத்தபாசம் கண்ணனுக்கு வர என்ன காரணம் என்பதை நான் இங்கே விளக்கத் தேவை இல்லை.ஆனால் அதே கட்டுரையில் ஞாநி எழுதியது தவறு தான் கண்ணனே ஒத்துக் கொள்கிறார்…..அப்புறம் எதற்கு வருகிறது கோபம் என்ற கேள்விக்கு யாரும் அளிக்கலாம் விடையை…<br />
வக்கிரம் பிடித்து, தான் என்ன எழுதுகிறோம் என்று நன்கு தெரிந்து தன்னுடைய விஷம் தோய்ந்த எழுத்துக்களால் தமிழர்களையும் ,அவர்களது பிரத்யோக ஆளுமைகளையும் தாக்கி வரும் ஞாநி குறித்து நாம் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை ஞாநி தி ரைட்டர் என்ற ஞாநியின் ரசிகர்கள் நடத்தி வரும் ஆர்குட் குழுமத்தில் முன் வைத்தோம்…ஞாநியின் எழுத்துகளில் தெரியும் ஆரிய மனம் என்று துவங்கும் அந்த விவாதத்தில் ஞாநியே நேரடியாக கலந்து கொண்டு விவாதித்து ,பிறகு ஒதுங்கிக் கொண்டார்…அந்த விவாத்தின் போது நமது உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகிகள் சசி,யுவன்பிரபாகரன், பிரபாகரன், தமிழ் மற்றும் பிரின்ஸ் பெரியார், விடாது கருப்பு போன்ற தோழர்கள் என்னோடு இணைந்து அந்த விவாதத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர்…..அந்த விவாதத்தில் பார்ப்பன மோசடியை, உள்ளுக்குள் அர்த்தம் புதைத்து எழுதும் மாய்மாலத்தை நம் தோழர்கள் இணைந்து அம்பலப் படுத்தினோம்…அதனால் அந்த விவாதம் அடங்கிய பத்தியே ஞாநி தி ரைட்டர் குழும நிர்வாகிகளால் நீக்கப்பட்ட்து..ஆனால் நான் அந்த விவாதத்தை முழுக்க சேகரித்து என்னுடைய வலைப்பூவான வெண்ணிற இரவுகளில் வெளியிட்டுள்ளேன்..</p>
<p>நம் உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மேற்கண்ட விவாதத்தை சமூக களத்திற்கு எடுத்து சென்று அந்த விவாதத்தை ஒரு சிறிய நூலாக்கி பாவலர் அறிவுமதி அண்ணனிடம் அளிக்க அந்த தொகுப்பைதான் அ.மார்க்ஸ் கலந்துக் கொண்ட காலச்சுவடு கண்ணன் குறிப்பிட்டுள்ள ஞாநி கண்டன கூட்டத்தில் அண்ணன் அறிவுமதி வாசித்தார்….</p>
<p>அந்த கூட்டத்தில் பேசியவர்கள் அனைவருமே ஞாநியின் மோசடித்தனத்தையும், பார்ப்பனர்கள் எழுத்துலகிலும், இலக்கிய அரங்கங்களிலும் செய்து வரும் மாய தந்திர பொய் பித்தலாட்ட வேலைகளை சுட்டிக்காட்டி பேசினர்….உடனே கண்ணனுக்கு வந்து விட்டது கண் மண் தெரியாத கோபம்…அ.மார்க்ஸ் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்துள்ள கண்ணன் அவரது கல்லூரி ஆசிரியர் பணி குறித்தும்,.தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் மிக தவறான தகவல்களை, பொய் பரப்பும் நோக்கத்தோடு புனைந்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.</p>
<p>அரசு ஊழியர் போராட்டத்தின் போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து பணியில் இணைந்தாக அ.மார்க்ஸ் மீது இமாலய குற்றச்சாட்டு சுமத்தி இருக்கும் புரட்சியாளர் காலச்சுவடு கண்ணன் எத்தனை முறை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது அவருக்கும் ,ஞாநிக்கும் தெரிந்த ரகசியங்கள்..<br />
அது இருக்கட்டும்….அ.மார்க்ஸ் கையெப்பமிட்டது மன்னிப்பு கடிதம் அல்ல….தொழிற்சங்கங்கள் அரசு ஊழியர்களுக்காக பொதுவாக வனைந்த விளக்க கடிதம்….அது அ.மார்க்ஸ் தயாரித்தது அல்ல…வேலைநீக்கம் செய்யப் பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்காக தொழிற்சங்கங்கள் தயாரித்து அளித்தவை…….நான் கேள்விப்பட்ட வகையில் அ.மார்க்ஸ் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க வாதி என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..அது மட்டுமில்லாது தலித் மற்றும் விளிம்பு நிலை இன மாணவர்களுக்கான போராட்டங்களில்,தன் முனைப்பை காட்டியவர் அ.மார்க்ஸ் என்பதை கண்ணன் அறிந்தும் அறியாமல் இருப்பது உண்மையை ஊருக்கு மறைக்கும் செயல்…</p>
<p>இதே கட்டுரையில் டாக்டர் அம்பேத்காருக்கும், தந்தை பெரியாருக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுவதாக உளறிக் கொட்டி குழப்பி இருக்கிறார் கண்ணன்..அதாவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என சர்வ கவனமாக யோசிக்கும் பார்ப்பன மூளை தான் வாழ்வதற்கான போராட்டத்திற்காக எதையும் செய்ய வல்லது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் இருக்க முடியும்..?</p>
<p>தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் இருவருமே பார்ப்பனன் வகுத்த சாதி நிலைகளை தகர்த்து மனிதன் மனிதனாக நடத்தப் பட வேண்டும் என்று போராடியவர்கள்…. ஏற்கனவே இதே போலத் தான் அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு நமது கடும் எதிர்ப்பை ஞாநி சந்தித்தார் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்….<br />
ஒரு வேளை தோழர்.ரவிக்குமாருக்கும், அ.மார்க்ஸ்க்கும் பிரச்சனைகள் இருப்பின் –அதற்கான தீர்வுகளையும் அவர்களே ஏற்படுத்திக் கொண்டு பார்ப்பன சாதி நிலைகளை தகர்க்கும் வேலையில் இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…<br />
அது குறித்து கண்ணன் கவலைப் பட ஏதுமில்லை…சிண்டு முடிவதை இந்த நூற்றாண்டிலாவது விடுங்கோ கண்ணன்….<br />
சர்ச்சையை ஊதி பெரிதாக்கும் வேலையை கண்ணன் செய்து வருவதை சம்பந்தப் பட்ட இருவரும் இனி புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு….ஞாநியின் பார்ப்பன மனோபாவத்தை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என குமுறும் காலச்சுவடு கண்ணன் கலைஞரை தரக் குறைவாக , வக்கிரமாக விவரித்து , அவரது முதுமையை வஞ்ச புகழ்ச்சி அணி தோற்றத்தில் எள்ளி நகையாடியதை ஆதரிக்கிறாரா..?</p>
<p>ஞாநி எழுதிய சர்ச்சை மிகுந்த அக் கட்டுரை வெளி வந்த காலக் கட்டம் சேது சமுத்திர திட்ட சர்ச்சையில் கலைஞர் உண்மையான உணர்வை வெளிப் படுத்தியதன் மூலம் இந்துத்துவ, பார்ப்பன சக்திகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பை சந்தித்து கொலை மிரட்டலுக்கு உள்ளான காலம்…<br />
அந்த வக்கிர கட்டுரைக்கு வேறு என்ன நியாயமான காரணங்கள் இருக்க முடியும் ஞாநிக்கு..?<br />
மேலும் அதே கட்டுரையில் தலித்களின் தலைவராக பெரியாரை காண முடியாது என கண்ணன் கதறுகிறார்…அது சரி…நாளை முதல் தலித்துகள் சங்கராச்சாரியை வழிபட வேண்டும் என்று கண்ணன் நினைப்பதெல்லாம் நடைபெற அவரது கனவுலகில் தான் சாத்தியம்….<br />
திருவாளர் கண்ணன் அவர்களே….<br />
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்….பெரியார், அம்பேத்கார் போன்றவை உங்களுக்கு எதிரான, உங்கள் கருத்தியல்களுக்கு எதிரான ஆளுமைகள்……அவற்றில் ஏற்படும் சரிவுகளையும், சங்கடங்களையும் நாங்கள் சரி செய்து கொள்கிறோம்…..நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சங்கர மடத்திற்கு காவடி தூக்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை..</p>
<p>மறைந்த சுந்தர ராமசாமி அவர்களை அ.மார்க்ஸ் உயர்சாதி அகங்காரம் மிகுந்த மேட்டிமை தனம் உடைய ஆளுமை என விமர்சித்தது அடக்கவியலா வெறுப்புணர்வு என்றால், பெரியாரையும், அம்பேத்காரையும் சிண்டு முடிந்து ஆதாயம் தேட முயல்வது என்ன உணர்வு..?</p>
<p>பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இடையே வேறுபாடுகளை பெரிதாக்கி ஆனந்த சிரிப்பை உதிர்க்க துணியும் எண்ணம் எத்தகையது..?<br />
சொல்லுங்கள் கண்ணன்…</p>
<p>பண்டைய வாழ்வியல் வரலாற்றுகளையே உங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி அதை எங்களை பள்ளிகளில் படிக்க வைத்து சாதி என்னும் சமூகக் கேட்டு படிமத்தை எங்களுள் பதித்த இனமாயிற்றே உங்கள் இனம்..?<br />
இதில் ரவிக்குமாரும், அ.மார்க்ஸும் எம் மாத்திரம்..?<br />
தோழர்களே…<br />
காலச்சுவடு கண்ணன் எழுதியுள்ள அ.மார்க்ஸ் குறித்த அக் கட்டுரை அவதூறு நிரம்பிய ஆத்திரக் கூச்சல்….ஆனால் இவர்கள் ஆத்திரம் பெரியாரை பின்பற்றும் நமக்கு ஒரு சிறிய புன்சிரிப்பையே உதிர்க்க வைக்கிறது…..<br />
ஆனால்….<br />
அதே சமயத்தில் காலச்சுவடு கண்ணனின் கட்டுரைக்காக நம் கண்டனத்தை தெரிவிப்பதும் நம் கடமை….</p>
<p>புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை ஒன்றுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்…..<br />
“ஆடுகின்றாய் உலகப்பா..யோசித்துப் பார்…<br />
ஆர்ப்பாட்டக்கார ர் இதை ஒப்பாரப்பா….<br />
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்…<br />
செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்,,,,<br />
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்<br />
உதையப்பர் ஆகிவிட்டால் ஒர் நொடிக்குள்<br />
ஓடப்பர்,உயரப்பர் எல்லாம் மாறி<br />
ஒப்பப்பர் ஆய் விடுவார் உணரப்பா…நீ..”</p>
<p>நன்றி…</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/19/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/19/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/19/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/19/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/19/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=19&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2007/12/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2007/10/08/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2007/10/08/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 08 Oct 2007 23:03:47 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[சேகுவேரா]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=18</guid>
		<description><![CDATA[நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே.. ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்&#8230;நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்&#8230; அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=18&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..<br />
ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்&#8230;நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்&#8230;</p>
<p>அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ காடுகளில் அலைந்து, பொலிவியா புரட்சியில் பங்கேற்று ,கடைசியில் வீர மரணம் எய்திய சேகுவேரா உள்ளம் முழுக்க கவிழ்ந்து கிடந்தது உலகளாவிய புரட்சி என்னும் கனன்று கொண்டிருந்த நெருப்பு &#8230;&#8230;</p>
<p>கியூப புரட்சியில் வென்ற போது சே கதாநாயகனாக வர்ணிக்கப் பட்டார். பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து கியூபாவை செம்மை படுத்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் சே&#8230;.அப்போது சே நினைத்திருந்தால் சுதந்திர கியூபாவில் சகல அதிகாரங்களோடு சுக போக வாழ்க்கை நடத்தி இருக்கலாம்.ஆனால் சேவின் புரட்சி மனம் சும்மா இருந்ததா&#8230;? இல்லை.</p>
<p>சர்வாதிகார அமெரிக்காவிற்கு கடும் சவாலாக இருந்தார் தோழர் சே&#8230;..மற்ற நாடுகளை சுரண்டி வாழும் சர்வாதிகார அமெரிக்க மனப் பான்மைக்கு கடும் நெருக்கடியை தந்தார் தோழர் சே&#8230;அமெரிக்கா இதுவரை தன்னியல்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால் அமெரிக்காவின் இளைய சமுதாயத்தினர் சேகுவேரா படம் பொறித்த சட்டைகளை அணிந்த்து திரிகின்றனர்.எதிரிக்கும் கூட உதாரணமாகிப் போன உத்தமர் தோழர் சே&#8230;</p>
<p>பிள்ளை பருவத்தில் தோற்றிய கடுமையான ஆஸ்துமா அவரை வாழ் நாட்கள் முழுக்க துரத்தியது.கடுமையான சுவாச கோளாறுகளால் அவரது உடல் நலம் பல நேரங்களில் குன்றிப் போனது&#8230;மேலும் பனாமா சுருட்டு ஆஸ்துமாவை தணிக்கும் என நம்பினார் அவர்&#8230;அதனால்தான் அவர் பெரும்பாலான நேரங்களில் சுருட்டோடு காணப் பட்டார்.அதுவே அவரது கவர்ச்சி மிகுந்த அடையாளமாய் மாறிப் போனது தனிக் கதை&#8230;..</p>
<p>09-10-07 தோழர் சேகுவேராவின் நினைவு தினம்&#8230;</p>
<p>தோழர் சேகுவேராவை இந்த நாளில் மட்டுமல்ல&#8230;.எல்லா நாட்களிலும் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்&#8230;..</p>
<p>செவ்வணக்கம்&#8230;</p>
<p>(தொடரும்)</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/18/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/18/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/18/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/18/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/18/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=18&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2007/10/08/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழக அரசியலின் எதிர்காலம் என்ற புதிர்</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2007/09/22/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2007/09/22/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Sat, 22 Sep 2007 23:01:50 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=17</guid>
		<description><![CDATA[காலங்களின் நெடுவாசற் கதவுகள் திறக்க நாகரிகக் கொடிப் பிடித்து நடக்கின்றார் மானுடர்கள்…. வரலாற்றின் திரை விலக வருகின்றார் வருகின்றார் தற்காலம் பாராட்டும் பொற்கால புத்திரர்கள்… -கவிஞர் இன்குலாப் காலம் ஏதோ ஒரு புள்ளியில் தன் ரகசியத்திற்கான சூட்சம முடிச்சை வைத்துள்ளது…வாழ்வதற்கான போராட்டம் என்ற கொள்கை நம் அரசியல் வாதிகளை பொறுத்தவரை பதவி பெறுவதற்கான போராட்டம் என்ற வகையில் மாறிப்போய் உள்ளது…. சினிமா மினுமினுப்பும், வாரிசு அரசியலின் வீச்சும் ,புகழ் போதைகளும் தற்கால தமிழக அரசியலை சுவாரசியப் படுத்துகின்றன [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=17&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>காலங்களின் நெடுவாசற்<br />
கதவுகள் திறக்க<br />
நாகரிகக் கொடிப் பிடித்து<br />
நடக்கின்றார் மானுடர்கள்….</p>
<p>வரலாற்றின் திரை விலக<br />
வருகின்றார் வருகின்றார்<br />
தற்காலம் பாராட்டும்<br />
பொற்கால புத்திரர்கள்…<br />
-கவிஞர் இன்குலாப்</p>
<p>காலம் ஏதோ ஒரு புள்ளியில் தன் ரகசியத்திற்கான சூட்சம முடிச்சை வைத்துள்ளது…வாழ்வதற்கான போராட்டம் என்ற கொள்கை நம் அரசியல் வாதிகளை பொறுத்தவரை பதவி பெறுவதற்கான போராட்டம் என்ற வகையில் மாறிப்போய் உள்ளது….</p>
<p>சினிமா மினுமினுப்பும், வாரிசு அரசியலின் வீச்சும் ,புகழ் போதைகளும் தற்கால தமிழக அரசியலை சுவாரசியப் படுத்துகின்றன ஒழிய அவை தமிழக அரசியலின் முக்கிய பொருண்மைகள் அல்ல….</p>
<p>தந்தை பெரியார் என்ற பதவி அரசியலில் இறங்காத தன்னலமற்ற சுயமரியாதைக் காரர் முதல் வாரிசுகளே இல்லாமல் இறந்துப் போன அறிஞர் அண்ணா,கர்மவீரர் காமராஜர், போன்றவர்களும் ,எளிமையின் வடிவாக திகழ்ந்த பொதுவுடையாளர் ஜீவா,கக்கன் போன்றவர்களும் தமிழக அரசியலில் சுடர் விட்டு மின்னியவர்கள்தான்.இவர்களுக்கு சினிமா பிரபல்யமோ,சாதீய அடையாளமோ இல்லை .ஆனால் நவீன தமிழக அரசியலின் முகம் தற்போது வெகுவாக மாறி விட்டது.மக்கள் FAST FOOD சாப்பிடுவது போல அரசியலையும் பார்க்கத் துவங்கி விட்டனர்..</p>
<p>திராவிட பெரியாரிய அரசியலின் மிச்சமுமாகவும், தமிழக அரசியலின் மூத்த தலைமையுமாகவும் இருக்கின்ற கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் நெடிய அரசியலின் முக்கிய பங்கேற்பாளராகவும்,இன்றியமையாத நிகழ்வுகளின் முக்கிய சாட்சியாகவும் திகழ்கிறார்.தனது பழுத்த அரசியல் ஞானத்தின் மூலம் தலைநகர் அரசியலையும் கட்டுப் படுத்த நினைக்கிறார்..பெரியார்,அண்ணா ஆகியோரிடம் அரசியல் பயின்று ராஜாஜி,காமராஜர் போன்ற வலுவான ஆளுமைகளை எதிர்த்து அரசியல் செய்து ,எம்.ஜி.ஆரிடம் விவரிக்க இயலா நட்பில் திளைத்து பிறகு அதே அளவிற்கு போரும் புரிந்து,இறுதியில் இன்று ஜெயலலிதாவை புள்ளி விபர அறிக்கையால் வீழ்த்த நினைக்கும் கருணாநிதி களைப்பறியா அரசியல் வித்தகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..ஆனால் கலைஞரே தன் வாழ்வினை திரும்பிப் பார்த்து மீள் ஆய்வுக்கு உட்படுத்துவாராயின் அவருக்கு சுய திருப்தி உண்டாகுமா என்பது அவர் மட்டும் அறிந்த ரகசியம்.</p>
<p>அதே போல ஜெயலலிதாவும்,கான்வெண்டில் படித்து சினிமாவில் அறிமுகமாகி,எம்.ஜி.ஆர் அறிமுகத்தால் அரசியலில் நுழைந்து சினிமா கவர்ச்சி மட்டும் இல்லாமல் தன் சுய ஆளுமை தன்னம்பிக்கை அறிவினால் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு சில முன்னாள் அமைச்சர்கள் மூலம் அ.தி.மு.க தலைமையை பிடித்து ,தி.மு.க விற்கு மாற்றாக அ.தி.மு.க வை மீண்டும் முன்னிறுத்தி முதல்வரானார்.எந்த பிடிவாத குணமும்,கோபமும் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றனவோ,அவையே அவரை வீழ்த்தியும் காட்டின. நல்ல ஆங்கில அறிவு,துணிச்சலான முடிவுகள் போன்ற பாஸிட்டிவ் குணங்களும் அவரை உயர்த்தி பிடிக்கின்றன என்றால் தடாலடி மாற்றம், யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லாதன்மையை நீடிக்குமாறு செய்வது போன்றவை அவரை பலவீனப்படுத்துகின்றன.</p>
<p>எனவே மேற்கண்ட இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கு பிறகு அல்லது அப்பால் வர இருக்கும் தமிழகத்தின் இளம் தலைவர்களை முறையான சிந்தனைகளுக்கு<br />
உட்படுத்துவது சரியானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது….</p>
<p>தமிழகத்தின் வருங்காலம் என்ற எதிர்கால கனவு யாரால் நிறைவேற உள்ளது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை காண புறப்படும் முன் தமிழகத்தின் முக்கிய இளம் ஆளுமைகள் பற்றி சிறிது ஆராய்வோம்.</p>
<p>மு.க.ஸ்டாலின் –இவர் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் என்பதும் ,தி.மு.க தலைமையினாலேயே அடுத்த தலைவராக அடையாளப்படுத்த படுகின்றவர் என்பதும் வெளிப்படையான ஒன்று….தலைவர் மகனாக இருந்தாலும் தலைமைப் பதவிக்கு இவர் தாவி வந்து விட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.மிசா சிறைப் பொழுதுகளில் கைதியாகவும்,தி.மு.க. வின் அனைத்து அரசியல் போராட்ட நிகழ்வுகளிலும் தலைமை பங்கேற்பாளராகவும், பல ஆண்டுகளாக தி.மு.க வின் இளைஞர் அணித் தலைவராகவும், இருந்து வருகிறார்….சென்ற முறை சென்னை நகர மேயராகவும்,பணியாற்றிய இவர் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.தற்போது பக்குவமான மனநிலைக்கும் நிதானப் போக்கிற்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதாக உணரப் படும் இவர் மிகவும் கவனிக்கத் தக்கவர்…ஆனால் கலைஞரிடம் காணப் படும் அயராத உழைப்பு, ஆழ்ந்த இலக்கிய அறிவு, அரசியல் சாதுர்யம்,துணிச்சல் போன்றவை ஸ்டாலினுக்கு கைவருமா என்பது கேள்விக்குறியே…மேலும் கட்சியில் பலம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலைஞருக்கு கட்டுபடுவது போல தளபதிக்கும் கட்டுப் படுவார்களா என்பதும் சிந்தனைக்குரியது.கலைஞர் அளவிற்கு ஸ்டாலினிடம் இல்லாத வசீகர வார்த்தை பிரோயகங்கள் தளபதிக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றன</p>
<p>வைகோ-தி.மு.கவில் இருந்தப் போதிலும் சரி,விலகி ம.தி.மு.க துவக்கிய போதிலும் சரி இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற வைகோ தன் அரசியல் முடிவுகளால் வெற்றிகளை அடையாத அடையாளமாக மாறிப்போனது குறிப்பிட தகுந்த உண்மையே.தன் சிம்மக்குரல் தமிழோசையிலும் ,தமிழ் இலக்கிய ,உலக வரலாற்று அறிவிலும் சிறந்தவரான வைகோவின் மாறாத ஈழ ஆதரவு அவரை பொடாச் சட்டத்தின் கீழ் சிறைப் படுத்தியது.ஆனால் கருணாநிதியின் குடும்ப அரசியல் என்று குற்றம் சாட்டிவிட்டு தனிக்கட்சிக் கண்டு பிறகு தாய் கழகத்தோடு கூட்டணி கண்டதும்,தன்னை பொடாச் சட்டத்தில் சிறையில் அடைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு சகோதர பாசம் கொண்டாடியதையும் கண்டு தமிழகம் குழம்பிப் போனது.</p>
<p>விஜய்காந்த்- சினிமா நடிகர்களின் கனவு அல்லது இலக்கு அரசியல் என்றாகி விட்ட நிலையில் விஜய்காந்த் குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டார் என்றே சொல்லவேண்டும்..சட்டசபை மற்றும் உள்ளாட்சி,இடைத்தேர்தல்களில் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதிகரித்து வருவதையும்,சினிமா மோகம் குறையாத தன்மையையும் ஒரு சேரப் பிரதிபலிக்கின்றன.பட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையான விருத்தாசலத்தில் வாகை சூடியதும், மற்ற கட்சிகள் அசர வைக்கும் அளவிற்கு புதுக்கோட்டையில் அடாத மழையிலும், விடாது மாபெரும் கூட்டம் கூட்டி மாநாடு நடத்தியதும் கவனிக்கத் தகுந்தவை.ஆனால் கூட்டணி இல்லாமல் வெற்றி கிடைப்பது சாத்தியமில்லை என்பதும் , கணிசமான ஓட்டுகளே வெற்றியாகாது என்பது கேப்டனுக்கு தெரியும் .மேலும் கட்சியில் வந்து சேரும் மற்ற கட்சிகளில் ஓரங்கட்டப் பட்ட முன்னாள் அமைச்சர்கள் ,ஊழல் குற்றம் சாட்டப் பட்டவர்கள் போன்றவர்கள் கட்சிக்கு பலமா, பலவீனமா என்பதும் ஆய்வுக்குரியது.</p>
<p>மு.க.அழகிரி.-கலைஞரின் மகன் என்பதை விட மதுரையின் மைந்தன் என்றே அதிகம் அறியப்பட்டு வந்துள்ளார்…மு.க. ஸ்டாலினுக்கும் ,இவருக்கும் அதிகாரப் போட்டி நடப்பதாக திரை மறைவில் கிசுகிசுக்கப்பட்டாலும் தன் தம்பியோடு சேர்ந்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்த முயல்கிறார்.தேர்தல் பணிகள் என்றால் வெற்றிக்கனியை பறிக்க இவர் காட்டும் தீவிரமாகட்டும், தென் மாவட்ட கழகப் பணிகளில் முன்னிலைப் படுத்தப்படுவதாகட்டும் அழகிரிக்கு நிகர் அழகிரிதான்…..ஆனால் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புப்படுத்த படுவது ,அழகிரி ஆதரவாளர்கள் மேல் உள்ள முரட்டுத் தன இமேஜ் போன்றவை மற்ற மாவட்ட மக்களிடம் செல்வாக்கை வளர்க்குமா என்பது சந்தேகமே.</p>
<p>கனிமொழி கருணாநிதி- சிறந்த கவிஞராக அறியப்பட்ட இவர் தலைவரின் மகள் என்பதாலும்,தயாநிதி மாறன் இடத்தை நிரப்பவும் எம்.பி ஆக்கப் பட்டுள்ளார்..தி.மு.க வின் பெண்ணினப் பிரதிநிதியாக அறியப் படும் இவர் கட்சியின் அமைப்புகளிலும்,கட்சியின் 2 மற்றும் 3 ஆம் மட்டத் தலைவர்களில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்.இன்னும் பொது வாழ்க்கைக்கு அடிப்படை அம்சமான பொதுத் தள பங்கேற்பு அவ்வளவாக இல்லாதத் தன்மையில் தன் தனிப்பட்ட குணாதிசியங்கள் மூலம் அரசியலில் தன் முக்கியத் துவத்தை நிலைநிறுத்தப் போராடுகிறார்.</p>
<p>பட்டாளி மக்கள் கட்சிவன்னியர் இன மக்களுக்கான கட்சி என்ற முத்திரையை நீக்க மருத்துவர் ராமதாஸ் முயன்று வருகிறார்.ஆளும் கட்சிக்கு இவர் நண்பனா,எதிரியா என்பது அன்றைய காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தால்தான் தெரிந்துக் கொள்ளமுடியும்.இவரது மகன் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அப்பாவை போன்ற அதிரடி அரசியலுக்கு இன்னும் பழக வில்லை என்றுதான் கூற வேண்டும் .பசுமைத் தாயகம், மக்கள் தொலைக்காட்சி போன்ற செயல்பாடுகள் கட்சியின் இளம் ஆளுமை சின்ன அய்யாவை உச்சிக்கு கொண்டு செல்லுமா என்பது காலம் சொல்ல வேண்டிய பதில்.</p>
<p>அதே போல் நாடார் இன ஒட்டுவங்கியை குறிவைத்து கட்சி துவங்கி இருக்கும் சரத்குமார், தேவர் இன ஒட்டு வங்கியை குறிவைத்து செயல் படும் பார்வர்ட் பிளாக் கார்த்திக் போன்ற நட்சத்திரங்களும் அரசியல் திரையிலும் மின்ன முயல்கிறார்கள்….</p>
<p>காமராஜர் ஆட்சிக் கனவிற்கு பங்காளியாக சரத்குமார் வந்து விட்டாலும், சளைக்காமல் இன்னும் கனவில் இருப்பது காங்கிரஸ் தான்….மத்திய அரசியலுக்காக மாநில கட்சியின் வளர்ச்சி புறக்கணிக்கப் படுகிறது என்ற புலம்பல் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் கோஷ்டி மோதல் களுக்கும் நடுவில் மெலிதாய் கேட்கத்தான் செய்கிறது… மத்திய அமைச்சர்களான ஜி.கே.வாசன்,ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றவர்களுக்கு காங்கிரஸில் பதவிகளை தன் ஆதரவாளர்களுக்கு பெற்றுத் தரவே நேரம் சரியாக உள்ளது….. இளம் தலைவர்களான கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத் போன்றவர்கள் எதாவது செய்து ஊடங்களில் இடம் பெறத் துடிக்கிறார்கள்.கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தி.மு.க ஆதரவு என்ற பேச்சும் உண்டு….</p>
<p>அ.தி.மு.க வை பொறுத்த வரை எல்லாம் ஜெயாமயம்.இரண்டாம் மட்டத் தலைவர்கள் நிரந்தரமல்லாதவர்கள்…பதவியில் இருக்கிறோமா என்று அம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது. கட்சியின் அதிகார மையமாக செயல்படுவதாக மற்றக் கட்சிகளால் குற்றம் சாட்டப் படும் சசிகலா,நடராஜன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினரின் பங்கு அதிமுக வில் முக்கியமான பொருண்மை என பொறுமி தள்ளுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள் . ஆனால் ஜெயலலிதா வழக்கம்போல் அதிரடி அறிக்கைகள் விட்டுக் கொண்டும், கட்சி அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் கிடைக்கும் ஆரத்தி உள்ளிட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டும்,உடன் பிறவா சகோதரியோடு பயணம் செய்துக் கொண்டும் அரசியல் செய்து வருகிறார்….தி.மு.க வில் கலைஞருக்கு பிறகு கைக் காட்ட தலைவர்கள் உள்ளனர் என்றால் …அம்மா கட்சியில் இதுப் பற்றி சிந்திக்கவே யாருக்கும் துணிச்சல் வராது.</p>
<p>தமிழக இடதுசாரிகள் தேர்தல் சமயங்களில் எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகள் பெற்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் துடிப்பதை தவிர முக்கியத்துவம் பெற்று விட வில்லை என்பதும் உண்மை.இடதுசாரிகளில் எளிமைக்கு பேர் போன ஜீவா, நல்லக் கண்ணு போன்ற தலைவர்கள்<br />
கவர்கிறார்களே தவிர அதிகாரத்திற்கு அவர்களாலே வர முடிய வில்லை.<br />
தமிழக செய்தி ஊடகத் துறையில் பன்முகத் தடம் பதித்துள்ள மாறன் சகோதரர்கள் இன்னமும் தமிழக அரசியலை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டுருப்பதாக சொல்லப் படுகிறது.பல்வேறுப் பட்ட<br />
செய்தித்தாள்கள்,பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள் என்று தன் சாம்ராஜ்ஜியத்தை<br />
நிறுவியுள்ள சன் குழுமம் தற்போது ரூ.75க்கு டி.டி.எச் தொழில்நுட்பத்தை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.ஊடகத்துறையின் ஏகபோக ஜாம்பவான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் சன் குழுமம் தமிழக அரசியலில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.கலைஞரும் தன் பேரன்கள் தான் தனக்கு போட்டி என நினைத்து பல முயற்சிகள் எடுத்து வருவது அவரது குடும்பத்திற்குள் இழையோடும் பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது…..அதன் சமீபத்திய முடிவு கலைஞர் தொலைக்காட்சி.</p>
<p>ஆனால் தமிழக மக்களுக்கு இதுப் பற்றி எல்லாம் கவலை இல்லை.. கொள்கை,நேர்மை,தனி மனித ஒழுக்கம்,சமூக எண்ணம் மொழியுணர்வு போன்ற தளங்களில் அவர்கள் தலைவர்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து வெகு நாட்களாகி விட்டன….ஊடகப் பரபரப்பை கூட்ட அரசியலை ஒரு காரணியாக வைத்து பார்க்க மக்கள் தயாராகி விட்டனர்.தேர்தல் அறிக்கைகளில் பொங்கி வழியும் சலுகை பாயாசமும் ,வாக்களர்களின் கரங்களில் திணிக்கப் படும் தேர்தல் கால பணப் பாதுஷாக்களும் மக்களுக்கு சர்க்கரை நோயை வரவழைத்து விட்டன போலத் தோன்றுகிறது…….தீயது என்று தெரிந்தும் திருட்டுத் தனமான சுவராசியத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்.</p>
<p>தமிழ்நாட்டு வாக்காளனைப் பொறுத்த வரை இம்முறை அரிசியும்,இலவச டி.வியும் வெற்றிப் பெற்றன….அடுத்த முறை இதை யார் தாண்டுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு…..விஜய்காந்த் பெற்று வரும் கணிசமான ஓட்டுக்கள் வெகுவாக கவனிக்கத் தக்கவை. தி.மு.க, அ.தி.மு.க க்கு மாற்றாக ஒரு சக்தி வேண்டும் என்று விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாவதையே இது காட்டுகிறது எனலாம்.அணி சேராத கட்சிகளின் பிரதிநிதியாக விஜய்காந்த் முன்னிறுத்தப் பட்டால் தமிழக தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு.இதே நம்பிக்கையோடு தான் சரத்குமாரும் புதிதாக கட்சி துவங்கி உள்ளார்.நாடார் இன மக்களுக்கான கட்சி என்ற தோற்றத்தை முறியடிக்க அவர் வெகுவாக முயன்று ,தன் கட்சி அனைத்து மக்களுக்கானது என்று உணர்த்தவே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் சூட்டி உள்ளார்.</p>
<p>சென்ற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க அறுதி பெரும்பான்மை பெறாததது ஆராயத்தக்கது.1952 வருட சட்டமன்ற தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் எதாவது கட்சிக்கு பெரும்பான்மை பலம் அளித்து வந்த தமிழக வாக்காளர்கள் இந்த முறை தி.மு.க விற்கு பெரும்பான்மை பலம் வழங்காததது தமிழகம் தென்னிந்தியாவில் மற்றுமொரு கேரளாவாக உருவெடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இனிவரும் தேர்தல்களும் இந்தப் போக்கையே பிரதிபலிக்கும் என நம்பலாம் .மேலும் சாதீய அரசியலின் பங்கும் தேர்தல் களத்தில் முக்கிய பணியாற்றும் என தெரிகிறது.கொள்கைகள் நீர்த்துப் போன கட்சிகள் நிறைந்த தேர்தல் களத்தில் பெரும் பாலான கிராமப் புற இளைஞர்கள் சாதீய அரசியலின் பால் ஈர்க்கப் படுகின்றனர் .மேலும் மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து செயல் படுவது ,உள்ளூர் அரசியல் தன்மை போன்றவை ஒரு கட்சி பெரும்பான்மை என்ற அம்சத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன.</p>
<p>தலித்திய அரசியல் செய்யும் தலைவர்களான தொல்.திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் வடக்கே மாயாவதி போல பெரிய சக்தியாக உருவாகாமல் போவது தமிழகத்தின் மற்றொரு தன்மையாக கொள்ளலாம். அதேபோல் தேசிய இயக்கமான காங்கிரஸ் திராவிட இயக்கங்களின் எழுச்சிக்கு பிறகு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும், அந்த இடத்தில் இருந்து முன்னேற முடியாமல் கட்டுண்டு கூட்டணி சுகத்தில் மீள முடியாமல் இருப்பதும் முக்கிய நிகழ்வுகளே.</p>
<p>காலம் என்பது காற்றை போன்றது…காலி இடம் என்று ஒன்று ஏற்பட்டால் காலமே தலைவர்களை உருவாக்கும் தன்மை கொண்டதுதான் .அறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு எதிர்பாராத வேளையில் கருணாநிதியும்,, அவருக்கு மாற்றாக எம்.ஜி.ஆரும் உருவானார்கள் …..வருங்காலத்தில் உணர்ச்சி வயப்பட்டு வாக்களிக்கும் கூட்டம் வெகுவாக குறைந்து போகும் என்றுதான் தோன்றுகிறது. வாரிசுகளின் யுத்தமும், சாதீயச் சத்தமும்<br />
அதிகமாகும் போலத் தான் தோன்றுகிறது.இது வெறும் தோற்ற மயக்கமாகவே போகக் கடவது.</p>
<p>ஆனால் தேசிய நலனை முன் வைக்கிற கொள்கைகள் இனிமேல் மாநில அளவில் எடுபடாது என்றுதான் தோன்றுகிறது..மேலும் மாநில நலன் காக்கும் கோஷங்கள் முன் வைக்கப்பட்டால் தேசியக் கட்சிகளுக்கு சிக்கல்தான்…ஆனால் சினிமாவின் மீது தமிழகத்தின் காதல் தொடர்கிறது..ஏதாவது தேர்தல் வந்தால் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்பது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.விஜய்காந்த் எதிர்காலத்தில் காங்கிரஸோடு கூட்டணி காண முயல்வார்….ஆனால் அவரது முயற்சிக்கு இன்றைய தடையான தி.மு.க நாளை மூன்றாம் அணியை இடது சாரிகளோடு இணைந்து உருவாக்க வாய்ப்புள்ளது…..வைகோவின் நிலை இனி என்ன என்பது யாருக்கும் தெரியாது.அம்மா,அய்யா இரண்டையும் தவிர்த்து அவர் தனியே நின்றும் பார்த்து விட்டார்.பலனில்லை.</p>
<p>நம் மக்களும் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்….இல்லையேல் புதிதாக அவர்களே தலைவர்களை சிருஷ்டிப்பார்கள்….</p>
<p>காலம் என்னும் வற்றாத நதியில் தமிழக அரசியல் விதி விலக்கா என்ன…?</p>
<p>தோன்றி அழிவது வாழ்க்கை-இதில்<br />
துன்பதோ டின்பம் வெறுமையென் றோதும்<br />
மூன்றில் எதுவரு மேனும்-களி<br />
மூழ்கி நடத்தல் பர சிவ முக்தி<br />
-மகாகவி பாரதியார்</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/17/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/17/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/17/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/17/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/17/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=17&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2007/09/22/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்&#8230;.</title>
		<link>http://tamilnesam.wordpress.com/2007/08/27/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9/</link>
		<comments>http://tamilnesam.wordpress.com/2007/08/27/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Mon, 27 Aug 2007 22:59:33 +0000</pubDate>
		<dc:creator>manisenthil76</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://tamilnesam.wordpress.com/?p=16</guid>
		<description><![CDATA[இந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்&#8230;.ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை&#8230;அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை&#8230;மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை&#8230; இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்&#8230; இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=16&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்&#8230;.ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை&#8230;அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை&#8230;மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை&#8230; இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்&#8230; இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன வென்றால்&#8230; பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள்&#8230;.என்ற கருத்தாக்கம் மட்டுமே&#8230;.</p>
<p>அடிப்படையில் பல்வேறு இனக்குழுக்களின் நம்பிக்கைகளின் தொகுப்பாகத்தான் இந்து மதம் திகழ்கிறது&#8230;எனவே முதலில் இந்து மதத்தை மதங்கள் பட்டியலில் சேர்ப்பதே தவறு&#8230;இந்து மதம் என்ற கற்பிதம் பார்ப்பனர்களின் பொருளாதார, சமூக மதிப்பீடுகளுக்கு ஆணிவேராக திகழ்கிறது&#8230;.எனவே தான் எந்த சாதியைக் காட்டிலும் பார்ப்பனர்களில்தான் நாத்திக,இடதுசாரி சிந்தனைகள் குறைவாக உள்ளது மேலும் மற்றவர்களை காட்டிலும் பார்ப்பனர்களே இந்து மதம் என்ற கற்பிதத்தை தூக்கி நிறுத்துவதில் முதன்மையானவராக திகழ்கின்றனர்&#8230;..</p>
<p>எனவே மதம் என்ற அடிப்படைவாதம் மூலமாக அரசியல் ,சமூக மதிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளை கண்டடைய பார்ப்பனர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்&#8230;</p>
<p>எனவே மதம் என்ற ஒரே ஒரு அடிப்படைவாதத்தை வைத்துக் கொண்டு மக்களை மதம் என்ற போதையில் ஆழ்த்தி, ஒட்டு மொத்த சமூகத்தின் நல்லிணக்கத்தை பிரித்து அதன் மூலம் அரசியல் லாபம், பார்ப்பன உயர்வு, மனு நீதி தர்மம் போன்றவற்றை அடைய எண்ணும் RSS ,VHP போன்ற அமைப்புக்கள் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தேவை இல்லை என்பது என் கருத்து&#8230;.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/tamilnesam.wordpress.com/16/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/tamilnesam.wordpress.com/16/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/tamilnesam.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/tamilnesam.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/tamilnesam.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/tamilnesam.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/tamilnesam.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/tamilnesam.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/tamilnesam.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/tamilnesam.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/tamilnesam.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/tamilnesam.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/tamilnesam.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/tamilnesam.wordpress.com/16/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/tamilnesam.wordpress.com/16/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/tamilnesam.wordpress.com/16/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=tamilnesam.wordpress.com&amp;blog=3432582&amp;post=16&amp;subd=tamilnesam&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamilnesam.wordpress.com/2007/08/27/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/567b81e4b4e72cf84a0837ab31f5151b?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">manisenthil76</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
